Stock News: பங்குச் சந்தையில் சரிவுக்குப் பின் எழுச்சி - காரணம் என்ன?
இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று காலையில் சற்று சரிந்து தடுமாற்றத்துடன் தொடங்கினாலும், பின்னர் ஓரளவு பாசிட்டிவ் போக்கு தொடர்ந்தது.
இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று காலையில் சற்று சரிந்து தடுமாற்றத்துடன் தொடங்கினாலும், பின்னர் ஓரளவு பாசிட்டிவ் போக்கு தொடர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.17) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 90.8 புள்ளிகள் சரிந்து 82,897.98 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 26.9 புள்ளிகள் சரிந்து 25,356.85 ஆக இருந்தது.
சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் இரண்டுமே நேற்று புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் ஒருவித தடுமாற்றப் போக்கை காண முடிந்தது. எனினும், இப்போது புதிய உச்சம் நோக்கிய ஏறுமுகம் தெரிவது முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
முற்பகல் 11.50 மணியளவில் சென்செக்ஸ் 59.91 புள்ளிகள் (0.072%) உயர்ந்து 83,048.69 ஆக இருந்தது. அப்போது, நிஃப்டி 25.75 புள்ளிகள் (0.10%) உயர்ந்து 25,409.50 ஆக இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி விகிதத்தை குறைத்து அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஆசிய பங்குச் சந்தைகளான டோக்கியோவிலும் ஷாங்காயிலும் பாதகமான போக்கு நிலவினாலும் கூட, ஹாங்காங் பங்கு வர்த்தகம் பாசிட்டிவாக உள்ளது. அதேபோல், அமெரிக்க பங்குச் சந்தையிலும் ஏற்றம் நிலவியது. இவை இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்றம் காணும் பங்குகள்:
நெஸ்லே இந்தியா
என்டிபிசி
ஐசிஐசிஐ பேங்க்
ஹிந்துஸ்தான் யுனிலீவர்
எல் அண்ட் டி
கோடக் மஹிந்திரா பேங்க்
இன்ஃபோசிஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
டிசிஎஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐடிசி
ஹெச்டிஹெஃப்சி பேங்க்
ஐடிசி
விப்ரோ
மாருதி சுசுகி
இந்திய ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்து டாலர் ஒன்றுக்கு ரூ.83.84 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan