Stock News: பங்குச் சந்தையில் புதிய உச்சம் - சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன?
இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று காலையில் இருந்தே பாசிட்டிவான போக்கு நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சத்தைத் தொட்டன.
இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று காலையில் இருந்தே பாசிட்டிவான போக்கு நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சத்தைத் தொட்டன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.16) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 180.92 புள்ளிகள் உயர்ந்து 83,071.86 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 89.2 புள்ளிகள் உயர்ந்து 25,445.70 ஆக இருந்தது.
சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் இரண்டுமே புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் பாசிட்டிவான போக்கு நீடித்து வருகிறது. வர்த்தகத் தொடக்கத்துக்குப் பின் சற்றே இறங்கு முகம் கண்டாலும், பெரிதாக வீழ்ச்சி இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
பிற்பகல் 12.40 மணியளவில் சென்செக்ஸ் 16.52 புள்ளிகள் (0.020%) உயர்ந்து 82,907.45 ஆக இருந்தது. அப்போது, நிஃப்டி 7.50 புள்ளிகள் (0.003%) சரிந்து 25,364.00 ஆக இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பணவீக்கம் சற்றே குறைவதுடன், இம்மாதம் 18-ம் தேதி வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் ஓரளவு குறைத்து அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஷாங்காய், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகமான போக்கு நிலவினாலும் கூட, அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் பாசிட்டிவ் உடன் நிறைடந்ததாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் கூடியுள்ளதாலும் தற்போது இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
என்டிபிசி
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
பாரதி ஏர்டெல்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஆக்ஸிஸ் பேங்க்
எல் அண்ட் டி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐடிசி
டாடா மோட்டார்ஸ்
டிசிஎஸ்
இன்ஃபோசிஸ்
இந்திய ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து டாலர் ஒன்றுக்கு ரூ.83.87 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan