Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம்!

இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டு செடியாகும் என்பதை தனது கண்டுபிடிப்பு மூலம் நிரூபித்து தாவரவியல் உலகில் ஓர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார் ராஜரத்தினம்.

மரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம்!

Monday October 14, 2019 , 3 min Read

இயற்கை தன்னுள் எண்ணற்ற ஆச்சரியப்படத்தக்க ரகசியங்களை ஓழித்து வைத்துள்ளது. ஓர் செடியை வளர்க்க விரும்பினால் நாம் விதை போடுவோம். வளமான மண், நீர் மற்றும் சூரிய ஓளி இருந்தால் செடி தானாகவே செழித்து வளரும் என்பதே இதுவரை நாம் அறிந்தது. விதையில்லாமல் செடியை உருவாக்க முடியுமா, ஓர் இலையை பிடிங்கி நட்டால் அது செடியாகுமா எனக் கேட்டால் நம்மை அனைவரும் கிண்டல்தான் செய்வார்கள்.


ஆனால், இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டு செடியாகும் என்பதை தனது கண்டுபிடிப்பு மூலம் நிரூபித்து தாவரவியல் உலகில் ஓர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்துள்ளார் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈடன் நர்சரி கார்டன்ஸ் உரிமையாளரான எஸ். ராஜரத்தினம்.


இதுவரை அனைவரும் சாதாரணமாக விதை போட்டு செடி வளர்ப்பார்கள். அதிலும் மண் பதியம், விண் பதியம், ஓட்டு கட்டுதல் மற்றும் திசு வளர்ப்பு என பல்வேறு தொழில் நுட்பங்கள் உள்ளன. ஆனால் இது எதிலும் சேராமல் புதிதாக இலை பரப்புதல் மூலம் அதிக மகசூல் தரக் கூடிய தாவர, மரக்கன்றுகளை உற்பத்தி செய்து தாவரவியல் துறையில் புதிய சாதனை கண்டுபிடிப்பை இவர் நிகழ்த்தியிருக்கிறார்.

ராஜரத்தினம்

வேளாண் வல்லுனர் ராஜரத்தினம்

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பண்ணைத் தொழில்நுட்பத்தில் இளங்கலை முடித்துவிட்டு, முதுகலை பயின்று வருகிறேன். முற்றிலும் புதிதாக குறைந்த செலவில் ஓர் முறையில் தாவரங்களை உருவாக்கவேண்டும் என முயற்சி மேற்கொண்டு வந்தேன்.


அப்போதுதான், ஓர் தாவரத்தில் உள்ள இலைகளைப் பறித்து, விதைகளுக்குப் பதிலாக அவற்றை நட்டு செடிகளாக உருவாக்க முடியுமா என முயற்சித்தேன்.

முற்றிலும் இயற்கையான முறையில் இலைகளைப் பறித்து அவற்றை இளநீரில் ஊறவைத்து, பின் சுமார் 30 டிகிரி வெப்பநிலை மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் வைத்து பராமரித்தால் 4 முதல் 5 வாரங்களில் இலையில் இருந்து வேர் வளரத் தொடங்கி, 8 முதல் 10 வாரத்தில் அது ஓர் செடியாக வளரத் தொடங்கி விடுகிறது. இதுவே எனது புதிய கண்டுபிடிப்பாகும், என்றார்.

பொதுவாக வேர்த்தூண்டலுக்காக சில ஹார்மோன்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு எதையும் பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கையான முறையில் இளநீரை மட்டுமே பயன்படுத்தினோம் என்கிறார் இவர்.

இலை

பொதுவாக நர்சரி கார்டனில் ஆண்டுக்கு 10 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்குவதை லட்சியம் எனக் கொண்டால், 10 லட்சம் விதைகள் தேவைப்படும். இதைத் தவிர்க்க ஓர் மரத்தில் அல்லது செடியில் ஆயிரக்கணக்கான இலைகள் இருப்பதால், அவற்றையே விதையைப் போல பயன்படுத்தலாமே என்ற யுக்தியின் அடிப்படையில்தான் இந்த கண்டுபிடிப்பு நிகழத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறைகிறதாம். அதே நேரத்தில் அதிகளவில் மகசூலும் கிடைக்கிறதாம்.


தனது இந்த புதிய கண்டுபிடிப்புக்காக பேட்டன்ட் உரிமை கோரி விண்ணப்பித்திருக்கும் ராஜரத்தினத்தைப் பாராட்டி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் உள்ள டைரக்ரேட் ஆப் அக்ரி பிசினஸ் டெவலப்மெண்ட் இயக்ககம், மத்திய அரசின் சிறு, குறு, மத்திய தொழில்களுக்கான அமைச்சகம் 6.25 லட்சம் ரூபாயை இவருக்கு நிதியாக வழங்கியுள்ளது.


மேலும், இதுகுறித்து அவர் கூறும்போது,

“இவ்வாறு இலை வழி நாற்று உற்பத்தியின் மூலம் கலப்படம் இல்லாத மரபணு தூய்மையான நாற்றுகள் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது. எனவே இத்தகைய செடிகளையே விவசாயிகள் அதிகளவில் விரும்புகின்றனர்,” என்கிறார்.
leafs

மேலும், இவர் இதுவரை இவ்வாறு இலைவழி நாற்று உற்பத்தி முறையில் கொய்யா, நாவல் மரங்களை உருவாக்கியுள்ளனர். தற்போது இவ்வாறு வேப்ப மரக் கன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு தாவர வகைகளை மீட்டுருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


மேலும், ஈடன் நர்சரி கார்டனில் வேளாண் கல்லாரி மாணவ, மாணவியருக்கு புதுமையான நாற்று உற்பத்தி முறைகள் குறித்து பயிற்சி பட்டறை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏராளமான வேளாண் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.


இந்த குளோனிங் முறையில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான Organic Compounds அதிகம் உள்ள தாவரங்களை உருவாக்கித் தருவதால் தொழிற்சாலைகளின் லாபம் அதிகரிப்பதோடு, விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது.

இலை2

இலை வழி நாற்று உருவாக்கம் குறித்து விளக்குகிறார் ராஜரத்தினம்.

ராஜரத்தினத்தின் இந்த சாதனைகளை கருத்தில்கொண்டு, மேட்டுப்பாளையம் நகராட்சி, Biodiversity committee-ல் இவரை உறுப்பினராக்கி, அப்பகுதியில் அதிகளவில் மரக்கன்றுகளை உருவாக்கி நடவும், அரிய வகை மூலிகைத் தாவரங்களை மீட்டு எடுக்கும் பொறுப்பையும் வழங்கியுள்ளது.


மேலும், தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்கும் இவர்கள் தங்களின் மரபணு தூய்மையான மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் சுமார் 90 கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இவரால் பயனடைந்துள்ளனர். மேலும், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், சுய உதவிக் குழுவினருக்கு இவர்கள் பயற்சியளித்து வருகின்றனர்.

மரக்கன்று வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் ராஜரத்தினத்துக்கு, அவரது கண்டுபிடிப்பு மற்றும் சமூக பணிகளைப் பாராட்டி பல்வேறு விருதுகள், பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவிலேயே முதல் சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் நர்சரியாக ஈடன் நர்சரி கார்டன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விருது

தனது புதிய கண்டுபிடிப்புக்காக விருது பெறுகிறார் ராஜரத்தினம்

இவரது இலை வழி நாற்று முறையில் அனைத்து மரங்களையும், அரிய வகை மூலிகைச் செடிகளையும் மீட்டுருவாக்கம் செய்து விட்டால், இயற்கையை அழிவிலிருந்து காக்க முடியும். இம்முறையின் மூலம் மரம் வளர்த்தல் என்பது மிகப் பெரிய புரட்சியாக அமையும்.

ஆம். ஓர் விதையில் இருந்து ஓர் மரம். அந்த மரத்தில் உள்ள லட்சக்கணக்கான இலைகள் மூலம் லட்சக்கணக்கான மரங்களை உருவாக்க முடியும் என்ற இந்த கண்டுபிடிப்பு உலகத்தையே பசுமையின் பாதைக்கு எளிதில் கொண்டு செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இவரது பண்ணையில் நாற்றுகளை பெற விரும்புவோர் அல்லது பயிற்சிபெற விரும்புவோர் 23-15, கருப்பாயம்மாள் பண்ணை, வெள்ளிபாளையம் சாலை, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம் எனும் முகவரியிலோ, 9486094670 எனும் கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும்,

edennurserygardens@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும்,

www.edunnurserygardens.com என்ற இணையதள முகவரியிலும் கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.