Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சென்னை ஒரு கிராமத் திருவிழா - நந்தனத்தில், செப் 27-29 நடைபெறும் 'செம்பொழில் 2024'

செம்பொழில் 2024 எனும் பெயரில் மூன்று நாள் கிராம திருவிழா மற்றும் கண்காட்சி செப் 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது

சென்னை ஒரு கிராமத் திருவிழா -  நந்தனத்தில், செப் 27-29 நடைபெறும் 'செம்பொழில் 2024'

Monday September 23, 2024 , 2 min Read

'செம்பொழில் 2024' எனும் பெயரில் மூன்று நாள் கிராம திருவிழா மற்றும் கண்காட்சி செப் 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு நமது கிராம திருவிழா மற்றும் பாரம்பரிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சென்னை நகருக்கு பலரும் குடிபெயர்ந்து வருகின்றனர். நகர வாழ்க்கை நவீன வசதிகள் கொண்டதாக இருந்தாலும், நாம் கிராம வாழ்க்கை சார்ந்த நம்முடைய வேர்களை மறந்துவிடுகிறோம்.

இன்றைய இளம் தலைமுறைக்கு நம்முடைய ஊர் திருவிழா மற்றும் பாரம்பரிய பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், கிராம திருவிழா அனுபவத்தை அளிக்கும் வகையில் செம்பொழில் 2024 கிராம திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.

village

சென்னை நந்தனத்தில் உள்ள் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செப் 27, 28, 29 ஆகிய தேதிகளில் இந்த திருவிழா நடைபெறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் பல வகை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நம்முடைய பாரம்பரியம், உணவு, உடை, கலாச்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாரம்பரிய விவசாயம், கால்நடை, உணவு, கலைகள், விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று நிகழ்ச்சியின் ஒருக்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கண்காட்சியில், கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் 200க்கும் மேல் ஸ்டால்கள் அமைகின்றன. பொழுதுப்போக்கு மற்றும் விளையாட்டு நிகழ்சிகளும் இடம் பெறுகின்றன. குதிரை மற்றும் மாடுகள் பங்கேற்கும் போட்டி, சிறிய விலங்கியல் பூங்கா உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

sempozhil

ஆடல், பாடல், கொண்டாட்டம், உணவு, உறவு, பாரம்பரியம் என இந்த கிராமத்திருவிழா நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்முடைய வேர்களை நினைவுபடுத்தும் வகையில் சென்னையில் ஒரு கிராமத்தை இந்த நிகழ்ச்சி கொண்டு வர இருக்கிறது. இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்டவரும் ஹிமாகிரன், தொண்டைமண்டலம் அறக்கட்டளை சார்பில் இந்த நிகழ்ச்சியை ஏற்று நடத்துகிறார்.

விழாவில் கலந்து கொள்ள கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.


Edited by Induja Raghunathan