Stock News: இந்திய பங்குச் சந்தை புதிய எழுச்சி - காரணம் என்ன?
ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவி வரும் சாதகமான போக்கு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக மீண்டு வருகின்றன.
ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவி வரும் சாதகமான போக்கு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக மீண்டு வருகின்றன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 5) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 564.80 புள்ளிகள் உயர்ந்து 73,554.73 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 176.65 புள்ளிகள் சரிந்து 22,259.30 ஆக இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது, முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் சென்செக்ஸ் 592.18 புள்ளிகள் (0.81%) உயர்ந்து 73,582.11 ஆகவும், நிஃப்டி 205.75 புள்ளிகள் (0.93%) உயர்ந்து 22,288.40 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகள் அமலுக்கு வந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு பெற்றது. அதேவேளையில், ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, ஹாங்காங், ஷாங்காய் மற்றும் சியோல் என அனைத்து பங்குச் சந்தைகளிலும் எழுச்சி காணப்படுகிறது. இத்துடன், உள்ளூர் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் இன்று காலயில் இருந்தே எழுச்சி ஏற்பட்டுள்ளது.

ஏற்றம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
டிசிஎஸ்
டாடா ஸ்டீல்
பவர் கிரிட் கார்ப்
டாடா மோட்டார்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
விப்ரோ
இன்ஃபோசிஸ்
எம் அண்ட் எம்
பாரதி ஏர்டெல்
ஐடிசி
டைடன் கம்பெனி
கோடக் மஹிந்திரா பேங்க்
என்டிபிசி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
ஆக்சிஸ் பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
பாஜாஜ் ஃபின்சர்வ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா சரிந்து ரூ.87.10 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan